இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
எப்போதும் இல்லாத வகையில் ஆச்சர்யமாக மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் என இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே நபரின் கதையில் நடிக்க இருக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. வரலாற்று வீரனாகிய குஞ்சாலி மரக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மம்முட்டியும், அதே கதையில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளனர்
இதற்கான வேலைகளை இரண்டு இயக்குனர்களும் துவங்கி விட்டனர். இப்படி ஒரே கதையை இரண்டு நடிகர்களும் நடிக்கும் போது எந்த படம் ஓடும் என்று ரசிகர்களுக்கு குழப்பம் வராதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜம். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பாக இயக்குனர் பிரியதர்ஷ்ன் மம்முட்டியிடம் இப்படி ஒரு படம் எடுக்கப்போவதை பற்றி கூறினாராம்.
மம்முட்டி அதை கேட்டுவிட்டு நீங்கள் எடுக்க போகும் படத்திற்கும் நாங்கள் எடுக்கப்போகும் கதைக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை உறுதிபட கூறினாராம் அதன்பிறகே நிம்மதியான ப்ரியஷ்ர்சன், மோகன்லாலை வைத்து வேறு கோணத்தில் படமாக்கும் அறிவிப்பை வெளியிட்டாராம்.