இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா டிஜிட்டல் மயமான பிறகு ஒரு கேமரா இருந்தால் போதும் யார் வேண்டுமானலும் சினிமா எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் வருகிறது நமக்கு நாம் என்ற படம். சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறவர் சுந்தரமூர்த்தி, இந்த இல்லங்களில் இருக்கும் ஆதரவற்ற பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி அவரே நடித்தும் உள்ளார். கயல் ஜரீன், சுனிதா, சுபாஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். தினா இசை அமைத்துள்ளார்.
"ஆதரவற்றோர் இல்லங்களில் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் நிறைய செலவாகும். அதோடு இல்லங்களிலேயே திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தி எடுக்க நினைத்தேன். அது புதிய முயற்சியாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது படம் முடிந்து விட்டது. பரபரப்பான கமர்ஷியல் சினிமாக்களுக்கு மத்தியில் இது நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும்" என்கிறார் சுந்தரமூர்த்தி.