டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அன்னக்கொடி படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சுபிக்ஷா. அதன் பிறகு கடுகு, கோலிசோடா 2, ரா ரா ராஜ்குமார் படங்களில் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் புதிய படம் "சக்கரை தூக்கலா ஒரு புன்னகை".
இதில் சுபிக்ஷா தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். நபீசா மூவி சார்பில் நபீஸ் ரகுமான் தயாரிக்கிறார். ருத்ரா என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். பிஜு விஸ்வநாத், வெங்கடேஷ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ராஜேஷ் மற்றும் ருத்ரா இசை அமைக்கிறார்கள். மகேஷ் பத்மநாபன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
ஹீரோ ஆடியோ கிராபியில் கோல்ட் மெடலிஸ்ட், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறார். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஹீரோயின் ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக வனப்பகுதிக்கு வர அவளுக்கு உதவி செய்ய, ஹீரோ நியமிக்கப்படுகிறார். ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இருவருக்கும் கருத்து மோதல் ஏற்படுகிறது. அவர், அவனது திறமையை அங்கீகரிக்க மறுக்கிறார். உதாசீனப்படுத்துகிறார்.
ஆனால் அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளித்து தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக் கொடுக்கிறார். அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை அவருக்கு பெற்றுத்தர அதற்கு தகுதியானவர் கதிர் என்பதை உணர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. அடர்ந்த காடுகளிலும், நெரிசல் மிகுந்த நகரிலும் படமாக்கி உள்ளோம். என்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன்.