தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை 28, சத்தம் போடாதே, தோழா, ராமன் தேடிய சீதை, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. தற்போது தயாரிப்பாளராகி தனது நண்பர் பத்ரி கஸ்தூரியுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ஜருகண்டி. இதில் ஜெய் ஹீரோ. ரெபோ மோனிகா என்ற புதுமுகம் ஹீரோயின்.
வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கி உள்ளார். போபோ சசி இசை அமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படம் பற்றி இயக்குனர் பிச்சுமணி கூறியதாவது:
பலர் படத்துக்கு தெலுங்கில் தலைப்பு வைத்திருப்பதாக கூறுகிறார்கள். தலைப்பு தெலுங்கு வார்த்தை தான் ஆனால் அது வைக்கப்பட்டிருக்கும் நோக்கம் வேறு. திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு சென்றால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வேகமா செல்லுங்கள் என்று தெலுங்கில் கூறுவார்கள். அந்த வார்த்தைதான் ஜருகண்டி. படமும் அப்படி வேகமாக செல்வதால் அந்த தலைப்பு வைத்திருக்கிறோம். அதோடு இந்தியா முழுக்க தெரிந்த ஒரு வார்த்தை அது.
மற்றபடி படம் ஆக்ஷ்ன் த்ரில்லர். பல ஆயிரம் கோடி வங்கியில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுகிறவர்கள் ஒரு பக்கம், சில ஆயிரம் கடன் வாங்கியவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது ஒரு பக்கம், சிலருக்கு கடனே மறுக்கப்படுவது ஒரு பக்கம். ஏன் இந்த முரண்பாடுகள் என்பதுதான் கதையில் மைய இழை. பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்றைய காலத்துக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜுடன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். என்கிறார் பிச்சுமணி.