'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் தலைமையில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனார். இதனால் நேற்று நடந்த படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் வெளிமாநில தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவது பெப்சி விதிகளுக்கு முரணானது. அதிக அளவில் பெப்சி தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்போது பணிபுரிந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப பெறுவோம்" என்றார்.