பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்த மகாநதி படம், கீர்த்தி சுரேஷை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றது. அதுவரை அவரை நார்மலான ஒரு நடிகையாக பார்த்து வந்த சினிமா வட்டாரம் அவரை பெருமையாக பார்க்கத் தொடங்கியது. என்றாலும், அந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷிற்கு பல படங்கள் புக்காகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் ஒரு புதிய படத்தில் கூட அவர் ஒப்பந்தமாகவில்லை.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், மகாநதி படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் தமிழில் விஜய், விக்ரம், விஷால் போன்ற முன்ணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகியிருந்தேன். ஆனால் மகாநதி படத்தில் நான் கதையின் நாயகியாக சாவித்ரி வேடத்தில் நடித்ததால் அதிகப்படியான கால்சீட் தேவைப்பட்டபோது, எனக்காக அந்த படக்குழுவினர் நிறையவே விட்டுக்கொடுத்தார்கள்.
விஜய்யின் சர்கார் படத்தில் நடிக்க ஏற்கனவே கால்சீட் கொடுத்திருந்தும் மகாநதியை நான் முடித்து விட்டு வரும் வரை எனக்காக காத்திருந்தார்கள். அந்த படத்தை முடித்த பிறகுதான் விஜய் படத்தில் நடித்தேன். அதேப்போல் விக்ரம், விஷால் படங்களிலும் அடுத்தடுத்து கால்சீட் கொடுத்து நடித்தேன்.