பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2010-ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான படம் 'தமிழ்ப்படம்'. ஸ்பூப் என்கிற வகைப்படமான இந்தப் படம் பல தமிழ்ப்படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்டது. தமிழுக்கு இந்தவகைப்படம் புதுசாக இருந்ததால் தமிழ்ப்படம் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படம் என்ற பெயரில் தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்கினார் சி.எஸ்.அமுதன். சுமார் 7 ஆண்டுகளாகியும் அந்தப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், 8 ஆண்டுகள் கழித்து தமிழ்ப்படம் படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது.
சிவா ஹீரோவாக நடிக்க, திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு 'தமிழ்ப்படம் 2.0' என்று முதலில் தலைப்பு வைத்தனர். ஆனால், திடீரென 'தமிழ்ப்படம் 2' என்று தலைப்பை மாற்றியுள்ளனர்.
ஜீரோவுக்கு மதிப்பில்லை என்பதால் தலைப்பை இப்படி மாற்றியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2.0 படத்தை தயாரித்து வரும் லைகா புரடக்ஷன்ஸ், 2.0 படத்தை கிண்டல் செய்வதுபோல் இருப்பதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனால் தான் தலைப்பு மாற்றப்பப்படதாக படத்துறையில் பேசப்பட்டு வருகிறது.