பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. தற்போதும் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார். இவற்றில் மோகினி உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டன. த்ரிஷா, தனிமையை அதிகம் விரும்புவாராம்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... நம்மை சந்திக்கும் அனைவருமே நண்பர்களாகி விடுவதில்லை. சிலர் மட்டுமே நண்பர்கள் ஆவார்கள். என்றாலும், இந்த காலத்தில் யாரையும் நம்பி விட முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு நானே நண்பன் என்றாகி விட்டேன். இதுதான் எனக்கு எப்போதும் பாதுகாப்பானது என்று கருதுகிறேன்.
அதோடு மனதுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய பிரச்சினைகள் வரும்போது தனிமையைத்தான் விரும்புவேன். எதற்காக பிரச்னை வந்தது என்று எனக்குள்ளேயே கேட்டு என்னை பரிசோதனை செய்து கொள்வேன்.