மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினியின் கபாலி படம் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே, தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். சினிமாவிற்கு வந்த புதிதில் பண தேவைக்காக மோசமான படங்களில் நடித்தேன் என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு எளிதாக வாய்ப்புகள் கிடைக்கின்றன. எந்த பின்புலமும் இல்லாதவர்கள் போராடுகிறார்கள். நான் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தேன். நிறைய சிரமங்களை சந்தித்தேன். ஆரம்பத்தில் எந்த மாதிரி படங்களில் நடிக்கணும் என்று கூட தெரியாது. அதனால் வர வாய்ப்புகளில் நடித்தேன். பணதேவைக்காக அப்போது மோசமான படங்களிலும் நடித்தேன். என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல, வர வாய்ப்புகளை எல்லாம் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறேன்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.