பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க, சிறிது நேரம் ஒதுக்குவாரா என, நடிகர், பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், 53, டுவிட்டர் சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரிய தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி, யோகா, உடற்பயிற்சி என, மிகவும் பிசியாக உள்ளார். டில்லியில், முதல்வருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, பிரதமர் சிறிது நேரம் ஒதுக்க முடியாதா; இதன் மூலம், தன் கடமையை அவர் நிறைவேற்றலாமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அதிருப்தி தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹாவும், டில்லி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.