இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
யோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க, சிறிது நேரம் ஒதுக்குவாரா என, நடிகர், பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர், பிரகாஷ் ராஜ், 53, டுவிட்டர் சமூக தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் பெரிய தலைவரான, பிரதமர் நரேந்திர மோடி, யோகா, உடற்பயிற்சி என, மிகவும் பிசியாக உள்ளார். டில்லியில், முதல்வருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க, பிரதமர் சிறிது நேரம் ஒதுக்க முடியாதா; இதன் மூலம், தன் கடமையை அவர் நிறைவேற்றலாமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த அதிருப்தி தலைவரும், நடிகருமான, சத்ருகன் சின்ஹாவும், டில்லி முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.