தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குப் பிடித்தவர்களில் பாடலாசிரியர் சினேகனும் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் பெண்களை அவ்வப்போது கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னதால் கொஞ்சம் விமர்சிக்கப்பட்டவர். ஆனால் வெளியில் வந்த பிறகு அதுபோன்று தான் வேண்டுமென்றே செய்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆறுதல் அங்கு தேவைப்பட்டதால் மட்டுமே உண்மையான பாசத்தோடு வெளிப்படுத்தப்பட்டது என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று முதல் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மீண்டும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்துகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் பற்றிய முழு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நேரத்தில், பிக்பாஸ்-2வில் கலந்து கொள்பவர்களுக்கு சினேகன் ஒரு அன்பான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
அதாவது, இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவரும் இயல்பாக இருக்க வேண்டும் என்பது தான். முதல் சீசனில் எங்களுக்கு அதுபற்றிய சரியான புரிதல் இல்லாமல் அவ்வப்போது செயற்கைத் தனங்களும் வெளிப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி யாரும் இருக்க முயற்சிக்கு வேண்டாம். காரணம் நம்முடைய இயல்புத்தன்மை வெளிப்படும்போது நேயர்கள் விமர்சிப்பார்கள். அதனால் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.