பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை கஸ்தூரிக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் பெரியதாக இல்லை. என்றாலும் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் திருநங்கைகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த கருத்து-க்கு திருநங்கைகள் அமைப்பு மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வரவே தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி, அந்த பதிவையும் நீக்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டு முன் திரு நங்கைகள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சித்து கோஷம் எழுப்பினார்கள், இந்த போராட்டத்தில் திருநங்கைகள் கையில் துடைப்பம், செருப்புடன் கலந்து கொண்டனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் திருநங்கைகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.