'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து, அதன் பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் குட்டி பத்மினி. இப்போது சின்னத்திரையில் கதாசிரியர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்துடன் பவனி வருகிறார்.
சின்னத்திரை தயாரிப்பார்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதோடு சமீபகாலமாக தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
3 வயதில் நடிக்க வந்த குட்டி பத்மினி எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். தனது சுயசரிதையில் எதையும் மறைக்காமல் எழுதி வருகிறாராம். யாரையும் மறைமுகமாக குறிப்பிடாமல் நேரிடியாக பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். இந்த சுயசரிதை எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.