ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காலா படத்தை ரிலீஸ் செய்த கையோடு கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் உள்ள கல்லூரியில் நடந்து வருகிறது. படத்தில் ரஜினி, கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் முந்தைய படங்களான கபாலி, காலா உருவான சமயத்தில் படப்பிடிப்பு தளத்தில் உடனுக்குடன் ரஜினியின் போட்டோக்கள் வெளியாகின.
இதுபோன்று நிகழாமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் பலத்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பின் போது எந்த காட்சியும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதற்காக தனியார் பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தொடர்புடையவர்கள் மட்டுமே, அதுவும் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதோடு மொபைல் போன் போன்றவற்றை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.