இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வதற்கு மிகப் பொறுமை வேண்டும். இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒருவரை மற்றவர் புகழ்வதைக் கேட்பதற்குத்தான் அந்தப் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அநியாயத்திற்கு மற்றவர்களைப் புகழ்ந்து தள்ளி அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்வார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு நடந்த 'ஆர்கே நகர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மேடையில் அமர்ந்திருந்த நடிகர் சிவா-வைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். அதிலும், அவரை ரஜினிகாந்த், அஜித் ஆகியோருக்கு அடுத்து ஒரு இடம் கொடுத்து புகழ்ந்தது எதற்கு என்றுதான் தெரியவில்லை
நிகழ்ச்சியில் பேசிய அனிருத், “சிவா சாருக்கு வந்து நான் மிகப் பெரிய ரசிகன். தியேட்டருக்கு போய் நான் கம்மியாதான் படம் பார்ப்பேன். 'தலைவர்' படம் பார்ப்பேன், 'தல' படம் பார்ப்பேன். அதுக்கப்புறம் சிவா படம்தான் பார்ப்பேன். இதை நான் மேடைக்காகச் சொல்லலை, உண்மையாவே சொல்றேன். ஒரு நடிகரா அவருடைய காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். 'வணக்கம் சென்னை' படத்துக்கு முன்னாடி இருந்தே சொல்றேன்,” என்றார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய வசூல் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யைப் பற்றி அனிருத் சொல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. விஜய் மீது அப்படி என்ன வெறுப்பு அனிருத்துக்கு ?.