ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொண்டன் படத்தில் அறிமுகமான அர்த்தனா, சமீபத்தில் வெளிவந்த செம படத்திலும் நடித்து இருந்தார். தொடர்ந்து, "கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம்" படங்கள் வெளிவர இருக்கிறது. எதையும் வெளிப்படையாக பேசுகிறவர் அர்த்தனா. "சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட்டுகள் இருப்பது உண்மை தான். நாம் தான் அதற்கு நோ சொல்லி பழக வேண்டும்" என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
செம எனக்கு மூன்றாவது படம். வெண்ணிலா கபடி குழு 2வில் தான் முதலில் கமிட் ஆனேன். அந்த படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. செம படம் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் கடைக்குட்டி சிங்கம். அதில் நான் நான் மூன்று ஹிரோயின்களில் ஒருவராக நடித்துள்ளேன். கிராமத்தில் வாழும் ஒரு குடும்ப கதை. குடும்பத்தோடு பார்க்கின்றன படமாக இருக்கும்.
சமூக கருத்துக்கள் உள்ள படங்கள், வரலாற்று படங்கள், பிறரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான படங்களில் நடிக்க ஆசை.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கிறது உண்மைதான். இது இந்தத்துறையில் மட்டும் இல்ல. எல்லாத்துறையிலும் இருக்கிறது. எனக்கு இதுவரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாது என்று சொல்லவில்லை இருக்கலாம். பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது வருத்தம் தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. எப்படி நோ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும் இதைத் தவிர்க்க முடியும். நோ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தாண்டித் தான் பெண்கள் முன்னேற வேண்டும் என்கிறார் அர்த்தனா.