மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த வருடம் கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப். தொடர்ந்து தனது படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் திலீப், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஓரிரு முறை சில நிகழ்சசிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில் நீதிமன்றத்தில் இரண்டு கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்திருந்தார் திலீப்.
அதில் தான் நடிக்கவுள்ள புரபெஷர் டிங்கன் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, சில நிபந்தனைகளை தளர்த்தும் விதமாக வைக்கப்பட்ட கோரிக்கை மனுவும் ஒன்று. ஆனால் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார் திலீப்.