‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் விஜயகாந்த், தன்னுடைய படத்தின் சூட்டிங் நடக்கும்போது, படத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்களுக்கு உத்தரவு போட்டு, அதன்படியே செய்யச் சொல்வார். அனைத்து தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதே பாணியில், இப்போது, நடிகர் அஜித்தும் செய்து வருவதாக, தமிழ் சினிமா உலகில் பேசுகின்றனர். தற்போது, விஸ்வாசம் படத்தில், நடிகைகள் நயன்தாரா, கலைராணி, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் அஜித், விஜயகாந்த் பாணியை படபிடிப்பில் தொடர்வதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், மூன்று முறை தங்களுக்கு பிரியாணி வழங்கியதாக, நடிகை கலைராணி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் அஜித், ரிசர்வ்டு டைப் ஆசாமி. அவர் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். சக நடிகர் - நடிகையரோடு கூட சகஜமாக பழக மாட்டார் என்று தான், கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், விஸ்வாசம் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கும் என்னோடு, அஜித், மிகவும் சகஜமாக பழகினார். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில், இதுவரை மூன்று முறை அனைவருக்கும் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார். ஆக, அஜித் குறித்து, வெளியில் பரவி இருக்கும் தகவலுக்கும், அவர் படப்பிடிப்பின் போது நடந்து கொள்ளும் விதங்களுக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இவ்வாறு கலைராணி கூறியுள்ளார்.