தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
ரஜினியின் காலா படத்தில் காமெடி கலந்த ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி. இந்த படத்தில் நடித்து வந்தபோது அவர் நடித்த இன்னொரு படம்தான் கோலிசோடா-2. இதுவரை புரட்சிகரமான, பாசிட்டீவான வேடங்களாக நடித்துள்ள அவர், இந்த படத்தில் முதன்முறையாக வாழ்க்கையில் தோல்விடைந்த ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி சமுத்திரகனி கூறுகையில், எப்போதுமே பாசிட்டீவாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். அந்தமாதிரி வேடங்களாகவே எனக்கு கிடைத்து வந்தன. ஆனால் முதன்முறையாக என்னை மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். வாழ்க்கையில் தோல்வியடைந்த ஒரு கேரக்டரில் பர்பாமென்ஸ் செய்திருக்கிறேன். எனக்கு இது ஒரு மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது.
கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்து வந்தது. ஆனால், அந்த கவுதம் மேனனே கோலிசோடா-2 படத்தில் என்னுடன் இணைந்து நடித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான வேடம் என்பதோடு, கவுதம் மேனனுடன் நடித்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் சமுத்திரகனி.