ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த மாதம் தமிழில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் வெளியானது. ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கில் அபிமன்யுடு என்கிற பெயரில் வெளியானது. தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போக, இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிரது..
இதனால் உற்சாகமான விஷால் இதற்காக ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார். அந்த நிகழ்வில் பேசிய விஷால், அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் இருந்து ஒரு ரூபாய் தெலுங்கு விவசாயிகளுகாக ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்
இதேபோலத்தான் இங்கே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆனபோது, ஒவ்வொரு படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து தமிழக விவசாயியகளுக்கு வழங்கப்படும் என கூறியதும், அதற்கு சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..