டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த மாதம் தமிழில் விஷால் நடித்த இரும்புத்திரை படம் வெளியானது. ஓரளவு நல்ல வெற்றியை பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கில் அபிமன்யுடு என்கிற பெயரில் வெளியானது. தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போக, இதுவரை சுமார் 12 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிரது..
இதனால் உற்சாகமான விஷால் இதற்காக ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தியுள்ளார். அந்த நிகழ்வில் பேசிய விஷால், அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் இருந்து ஒரு ரூபாய் தெலுங்கு விவசாயிகளுகாக ஒதுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்
இதேபோலத்தான் இங்கே விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆனபோது, ஒவ்வொரு படத்தின் டிக்கெட் தொகையில் இருந்தும் ஒரு ரூபாய் எடுத்து தமிழக விவசாயியகளுக்கு வழங்கப்படும் என கூறியதும், அதற்கு சில தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..