டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அன்னக்கொடி, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை என சில படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. ஆனால் அதன்பிறகு விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த வேடம்தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தற்போது கடுகு சுபிக்ஷா என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா-2 படத்தில் கடுகு படத்தை விட ஒரு பெரிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார் சுபிக்ஷா.
அதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் சிறிய வேடம் என்றபோதும் தயங்காமல் நடித்தேன். ஆனால் அந்த வேடம்தான் என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. அதையடுத்து இப்போது கோலிசோடா-2 படத்திலும் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்துள்ளார்.
முதல் படத்தில் நடித்த பாரத் சீனிக்கு ஜோடியாகவே இந்த கோலிசோடா-2 படத்திலும் நடித்துள்ளேன். அதோடு இன்னும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறேன். அதனால் கோலிசோடா-2 தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சுபிக்ஷா.