‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அன்னக்கொடி, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை என சில படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. ஆனால் அதன்பிறகு விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த வேடம்தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தற்போது கடுகு சுபிக்ஷா என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா-2 படத்தில் கடுகு படத்தை விட ஒரு பெரிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார் சுபிக்ஷா.
அதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் சிறிய வேடம் என்றபோதும் தயங்காமல் நடித்தேன். ஆனால் அந்த வேடம்தான் என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. அதையடுத்து இப்போது கோலிசோடா-2 படத்திலும் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்துள்ளார்.
முதல் படத்தில் நடித்த பாரத் சீனிக்கு ஜோடியாகவே இந்த கோலிசோடா-2 படத்திலும் நடித்துள்ளேன். அதோடு இன்னும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறேன். அதனால் கோலிசோடா-2 தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சுபிக்ஷா.