ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அன்னக்கொடி, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை என சில படங்களில் நடித்தவர் சுபிக்ஷா. ஆனால் அதன்பிறகு விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த வேடம்தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தற்போது கடுகு சுபிக்ஷா என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலி சோடா-2 படத்தில் கடுகு படத்தை விட ஒரு பெரிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார் சுபிக்ஷா.
அதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் சிறிய வேடம் என்றபோதும் தயங்காமல் நடித்தேன். ஆனால் அந்த வேடம்தான் என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது. அதையடுத்து இப்போது கோலிசோடா-2 படத்திலும் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்துள்ளார்.
முதல் படத்தில் நடித்த பாரத் சீனிக்கு ஜோடியாகவே இந்த கோலிசோடா-2 படத்திலும் நடித்துள்ளேன். அதோடு இன்னும் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறேன். அதனால் கோலிசோடா-2 தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சுபிக்ஷா.