புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை தமிழ் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
ஆந்திராவில் வெளியான படம், இதுவரை 12 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை படம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படம் 25 கோடி வரை வசூலிக்கும் என்று தெலுங்கு திரைப்பட வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.