ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை தமிழ் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
ஆந்திராவில் வெளியான படம், இதுவரை 12 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை படம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படம் 25 கோடி வரை வசூலிக்கும் என்று தெலுங்கு திரைப்பட வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.