தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறு பட்ஜெட் படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்தவர் சுபிக்ஷா. கடுகு படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனாலும் படத்தின் நீளம் கருதி சுபிக்ஷாவின் காட்சிகள் குறைக்கப்பட்டது. அதனால் இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படமான கோலி சோடா இரண்டாம் பாகத்தில் சுபிக்ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இதில் சுபிக்ஷா விஜய் மில்டனின் தம்பி பாரத் சீனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருகிற 14ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் மூலம் தனக்கு ஹீரோயினாக நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் சுபிக்ஷா. படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது:
படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவள்ளி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாபாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.
கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார். கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். என்கிறார் சுபிக்ஷா.