வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயகத்தில் 'காலா' படம் நேற்று வெளியானது. வழக்கமாக ரஜினி படம் ரிலீஸாகும்போது முதல் நான்கு நாட்களுக்கான காட்சிகள் முன் கூட்டியே புக் ஆகிவிடும்.. ஆனால் இந்தமுறை முதல் நாளே பல தியேட்டர்களில் எளிதாக டிக்கெட் கிடைத்தது.
சமீபத்தில் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் தான் கூட்டம் குறைந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து நடிகர் விஷால் கூறும்போது, “ரஜினி ரசிகர் பலம் முன்பைவிட பலமாகவே மாறியிருக்கிறது. இது ரம்ஜான் சமயம் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தசமயத்தில் நோன்பு வைத்திருப்பவர்கள் எவ்வளவு தான் தங்களது அபிமான நடிகரின் படம் என்றாலும் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்