ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயகத்தில் 'காலா' படம் நேற்று வெளியானது. வழக்கமாக ரஜினி படம் ரிலீஸாகும்போது முதல் நான்கு நாட்களுக்கான காட்சிகள் முன் கூட்டியே புக் ஆகிவிடும்.. ஆனால் இந்தமுறை முதல் நாளே பல தியேட்டர்களில் எளிதாக டிக்கெட் கிடைத்தது.
சமீபத்தில் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் தான் கூட்டம் குறைந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து நடிகர் விஷால் கூறும்போது, “ரஜினி ரசிகர் பலம் முன்பைவிட பலமாகவே மாறியிருக்கிறது. இது ரம்ஜான் சமயம் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தசமயத்தில் நோன்பு வைத்திருப்பவர்கள் எவ்வளவு தான் தங்களது அபிமான நடிகரின் படம் என்றாலும் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்