அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயகத்தில் 'காலா' படம் நேற்று வெளியானது. வழக்கமாக ரஜினி படம் ரிலீஸாகும்போது முதல் நான்கு நாட்களுக்கான காட்சிகள் முன் கூட்டியே புக் ஆகிவிடும்.. ஆனால் இந்தமுறை முதல் நாளே பல தியேட்டர்களில் எளிதாக டிக்கெட் கிடைத்தது.
சமீபத்தில் ரஜினி தூத்துக்குடி விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் தான் கூட்டம் குறைந்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து நடிகர் விஷால் கூறும்போது, “ரஜினி ரசிகர் பலம் முன்பைவிட பலமாகவே மாறியிருக்கிறது. இது ரம்ஜான் சமயம் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தசமயத்தில் நோன்பு வைத்திருப்பவர்கள் எவ்வளவு தான் தங்களது அபிமான நடிகரின் படம் என்றாலும் படம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்கிறார்