தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஞ்சித் ஆதரவாளர்கள் படத்தை ஆகா, ஓகோவென பாராட்டி வருகிறார்கள். அற்புதமான கருத்துக்களை ரஞ்சித் படத்தில் வைத்திருக்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சியையே ரஞ்சித் சொதப்பியிருக்கிறார், 'வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்' வசனத்தை வீணாக்கி விட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் குறியீடுகளாக அம்பேத்காரை முன்னிலைப்படுத்தியும், ராமர், வினாயகர், கிருஷ்ணர் ஆகிய கடவுள்களை எதிர்த்தும் உள்ளார் என்றும் பக்தியாளர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.
நடுநிலைவாதிகள் இந்தப் படத்தை ரஜினிகாந்த் அத்தனை முறை பார்த்தேன் என்று சொன்னாரே, படம் அருமையாக உள்ளது என்று வேறு பாராட்டினாரே, அப்புறம் ஏன் போராடக் கூடாது என்று நிஜத்தில் வசனம் பேசினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
முதலில் படத்தில் உள்ள கருத்துக்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டாரா, அப்படி புரிந்து கொண்டிருந்தால் அவர் பேட்டிகளில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று சொல்லியிருக்க மாட்டாரே என்கிறார்கள். ஆன்மீக அரசியல் நடத்த உள்ளேன் என்று சொல்பவர், ஆன்மீகத்தை எதிர்க்கும் காட்சிகளில் எப்படி நடித்தார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கான, மக்களுக்கான படமல்ல, ரஜினிகாந்த்திற்கான படம், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.