'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. 2009ம் ஆண்டில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அனன்யா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'நாடோடிகள்' படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. சுமார் 9 வருடங்கள் கழித்து இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள்.
'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் மதுரையில் ஆரம்பமானது. அதன் பின் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். அதன் பின் ஸ்டிரைக் முடிந்ததும் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து முடிந்துள்ளது. திட்டமிட்டபடி மிகக் குறுகிய நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.
சசிகுமார் நடித்து கடைசியாக வெளிவந்த 'பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத் தேவா, கொடி வீரன்' ஆகிய படங்கள் அவருடைய முந்தைய படங்களைப் போல பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் 'நாடோடிகள் 2' படத்தை சசிகுமார் பெரிதும் எதிர்பார்க்கிறார். ஏற்கெனவே, 'அசுரவதம்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.