அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இப்போதெல்லாம் யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல், ஷூட்டிங்கூட பார்க்காமல் படம் பார்த்து படம் இயக்க வருகிறவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வரிசையில் மு.ரா.சத்யா என்பவர் தயாரித்து, இயக்கி. நடித்துள்ள படம் "என்னோடு நீ இருந்தால்".
மானசா நாயர் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, அஜய் ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி, அழகு, மீரா உள்பட பலர் நடித்துள்ளனர். நாக சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.கே. இசை அமைத்துள்ளார். படம் பற்றி மு.ரா.சத்யா கூறியதாவது:
நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. படங்கள் பார்த்த அனுபவத்திலும் நிறைய கதை புத்தகங்கள் எழுதிய அனுபவத்தையும் கொண்டு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். இது ரொமாண்டிக் த்ரில்லர் வகை படம். படத்தை பார்த்தவர்கள் அனுபவம் வாய்ந்த இயக்குனரின் படம் போல இருப்பதாக பாராட்டியது சந்தோஷமாக இருக்கிறது.
இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதாமாக ரசிக்கவைக்கும். சென்சாரில் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூன் 15 ம் தேதி வெளியாக உள்ளது. என்றார் இயக்குனர் மு.ரா.சத்யா.