'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற 7ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்து ரமேஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள முதல்வரின் தனி பிரிவில் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மும்பை வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை படைத்த தமிழர், இன்றும் மும்பைவாழ் தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற 'குட்வாலா சேட்' என்று தமிழர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற எஸ்.திரவிய நாடார் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'காலா' படம் எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.திரவிய நாடாரின் புகழை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் அவர் தமிழ் சமுதாயத்துக்கு செய்த சேவைகளை திரைக்கதையாக்கி இயக்குனர் பா.ரஞ்சித் சாதிய உள்நோக்கத்தோடு, கதை நாயகனை சாதியின் குறியீடாக மாற்றியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களில் சினிமா எனும் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் சாதி மோதல்கள் ஏற்பட்டு பல துயர சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு 'காலா' திரைப்படத்தில் எஸ்.திரவிய நாடார் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் இருக்கிறதா? என மறு தணிக்கைக்கு தமிழக அரசு உத்தரவிடவேண்டும். வருகிற 7-ந் தேதி வெளியாக உள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதித்து சாதிய மோதல்கள் ஏற்படாத வகையில் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.