சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம் ஜுன் 7ம் தேதி வெளியாகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு பற்றி பேசிய ரஜினிகாந்த், போராட்டம் நடத்திய அன்று சமூக விரோதிகளால் தான் கலவரம் ஏற்பட்டது என்றார். அதோடு, எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என்றும் பேசினார். அவரது பேச்சுக்களுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் 'காலா'வைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சும் சமூக வலைத்தளங்களில் பலமாக எழுந்தது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதனால், நார்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் 'காலா' படத்தை திரையிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை 'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. அங்கு படத்தை சிக்கலின்றி வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதனிடையே, நேற்று 'காலா' படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காலா' படத்திற்கு இதைவிட அதிகமான எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், அது குறைவாகத்தான் உள்ளது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற, ஆனாலும் இரண்டையும் சேர்த்தே பார்க்கிறாங்க. என்ன பண்ண முடியும். ஒரு படத்துல விஷயம் இருந்தால் மக்கள் ஏத்துப்பாங்க, நல்லா இல்லைன்னா விட்டுடுவாங்க. காலாவை தடை செய்ய கர்நாடக அரசு அனுமதிக்காது” என்றார் ரஜினிகாந்த்.