ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் அறிமுகமான பெங்களூர் பொண்ணு மனீஷா யாதவ். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னலோரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, படங்களில் நடித்தார். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி பட வாய்ப்புகளை தடுத்தது. இதனால் மனீஷா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
அவர் திருமணத்துக்கு முன்பு நடித்த ஒரு குப்பை கதை படம் சமீபத்தில் வெளிவந்தது. இதில் மனீஷாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டு தந்த உற்சாகத்தில் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஒரு குப்பை கதை படத்தில் எனது நடிப்பை பாராட்டி எல்லோரும் புகழும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் முன்பே வெளிவந்திருந்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பேன். லேட்டாக வந்தாலும் அது எனக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை இந்த பாராட்டுகள் உடைத்து விட்டது. எனது கணவரும், விரும்பினால் நடிக்கலாம் என்று முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நல்ல கதையம்சமுள்ள படங்களையும், நடிக்க வாய்ப்பிருக்கும் அழுத்தமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இதற்காக இப்போது கதை கேட்டு வருகிறேன் என்கிறார் மனீஷா யாதவ்.