'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கன்னட சீரியலிலிருந்து தமிழுக்கு வந்தவர் கவிதா கவுடா. ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்தவர் நீலி தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். அந்த தொடரில் அவர் வில்லியாக இருந்தாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. சிறந்த வில்லிக்கான விஜய் டி.வி விருதும் பெற்றார். நீலி தொடர் முடிந்ததும், தொடர்ந்து அவருக்கு வில்லி வாய்ப்புகளே வர அதை மறுத்து விட்டார். வில்லி நடிகை என்று பெயர் எடுக்க விரும்பாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பிச் சென்று விட்டார்.
தற்போதும் ஒரே நேரத்தில் 3 சீரியல்களில் நடிக்கிறார். இப்போது இரண்டு கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகள் கவிதாவுக்கு பேசத் தெரியும், அதோடு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் இரண்டையும் முறைப்படி கற்றவர். இத்தனை திறமை இருந்தும் ஏன் வில்லியாகவே நடிக்க வேண்டும் என்று கிளம்பிப் போனவர் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஒரு வேளை அவர் தமிழ் படங்களின் ஹீரோயினாகவும் நடிக்ககூடும்.