இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி-2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணை இணைத்து மல்டி ஹீரோ படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவதாக கூறியுள்ள அவர் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பினை தற்காலிகமாக வைத்துள்ளார்.
இந்த படம் எந்தமாதிரியான கதையில் உருவாகிறது என்பதை இன்னும் ராஜமவுலி அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது இப்படம் கேங்ஸ்டர் கதையில் தயாராகயிருப்பது தெரியவந்துள்ளது. இதில், கேங்ஸ்டர் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, உயர் போலீஸ் அதிகாரியாக ராம் சரண் நடிக்கிறாராம். அதனால் அவர்கள் இருவரையும் உடல்ரீதியாக தங்களை தயார்படுத்த, டிரைனர்களை வைத்து தீவிர பயிற்சி கொடுத்து வருகிறாராம் ராஜமவுலி.