பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது ரூ.65 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார் சினிமா பைனான்சியர் போத்ரா. இந்த வழக்கில் ரஜினியின் பெயரும் சேர்க்கப்பட்டடுள்ளது. தன்னிடம் பணம் பறிக்கவே போத்ரா வழக்கு தொடர்ந்திருப்பதாக ரஜினி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் போத்ரா. இந்த வழக்கில் ஜூன் 6ந் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி கோர்ட் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தார். அதில், பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, என் மீது சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என்னிடம் பணம் பறிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.