'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி பேசியதாக கூறி, அவரின் காலா படத்தை திரையிட தடை விதித்து இருக்கிறது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை. இதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் விஷால் கூறியிருப்பதாவது... "காவிரி விவகாரம் பற்றி ரஜினி பேசியது அவரின் கடமை மற்றும் அவரின் பேச்சுரிமை. இதற்காக காலா படத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும். இந்த விஷயத்தில் கர்நாடக பிலிம் சேம்பர் மற்றும் அதன் நிர்வாகிகள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இந்தியர்கள்" என தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே விஷால் அளித்த பேட்டியில், காலா படம் கர்நாடகாவில் திரையிடுவது தொடர்பாக திரைப்பட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் உதவும். இந்த விஷயத்தில் பிரதமர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும். உளவுத்துறையின் குறைபாடே துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என்றார்.