டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பழம் பெரும் இயக்குனர் முக்கா சீனிவாசன் நேற்று காலமானார். அவரைப் பற்றிய சில நினைவலைகள்...
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பினார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கிளாப் அடிக்கும் பாயாக பணியாற்றினார்.
கருணாநிதி வசனத்தில், எம்ஜிஆர்., நடிப்பில் வெளியான மந்திரி குமாரி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அது அவருக்கு பெரிய அடையாளத்தை தந்தது. பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.
பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் 'முதலாளி' வெளி வந்தது. முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது.
இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி உடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்
இவர் தயாரித்து, இயக்கிய 'தாமரைக்குளம்' திரைப்படத்தில் தான் நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.
சிவாஜியின் உற்ற நண்பரான இவர், 'அந்தமான் காதலி', 'இமயம்', 'பரீட்சைக்கு நேரமாச்சு', 'கீழ்வானம் சிவக்கும்' போன்ற படங்களை சிவாஜியை வைத்து இயக்கினார். இதில் 'அந்தமான் காதலியும்', 'இமயமும்' நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.
எம்ஜிஆரை தவிர்த்து தமிழ் சினிமாவின் அன்றைய ஜாம்பவான்களான சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களை இயக்கி உள்ளார்.
ரஜினி நடிப்பில் 'பொல்லாதவன்', 'சிவப்புசூரியன்' திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கினார்.
கமல்ஹாசனுக்கு ஹீரோ அந்தஸ்த்து பெற்று தந்த அந்தரங்கம் படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன் தான்.
மணிரத்தினத்தின் 'நாயகன்' திரைப்படத்தைத் தயாரித்தார். இவர் தயாரித்த படங்களிலிலேயே இது தான் பெரிய பட்ஜெட் படம்.
1979-ம் ஆண்டு இவருடைய தலைமையில் தான் 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்' உருவாக்கப்பட்டது
துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
முக்தாவின் இன்னொரு முகம் எழுத்தாளர் இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். 'தமிழ்த் திரைப்பட வரலாறு', 'தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு', 'கலைஞர்களோடு நான்', 'கதாசிரியர்களோடு நான்', 'அறிஞர்களோடு நான்' போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'தமிழகம் கண்ட இணையற்ற சாதனையாளர்கள்' என்ற புத்தகம் 5 பாகங்களாக வெளிவந்திருக்கிறது. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சாதனை படைத்த அத்தனை முக்கியமானவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தந்திருக்கிறார்.
காளிதாஸனின் 'சாகுந்தலம்', 'மேகதூதம்', 'ருது சம்ஹாரம்', 'வடமொழி இலக்கியம்' போன்றவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார். மாணவர்களுக்கான 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை' எழுதியிருக்கிறார். தி.நகரில் உள்ள தனது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தை நடத்தி வந்தார்.