‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ரஜினியின் சம்பந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் போத்ரா 65 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரஜினியையும் அவர் சேர்த்திருந்தார். தன்னிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு முகுந்த் சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 6ந் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி கோர்ட் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தன் மீது தொரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாது:
பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என் மீது சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என்னிடம் பணம் பறிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று இந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் அதே காரணத்துக்காக வழக்கு தொடர்வது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. என்னை மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் ரஜினி கூறியுள்ளார்.