டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினியின் சம்பந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் போத்ரா 65 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரஜினியையும் அவர் சேர்த்திருந்தார். தன்னிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு முகுந்த் சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 6ந் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி கோர்ட் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தன் மீது தொரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாது:
பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என் மீது சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என்னிடம் பணம் பறிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று இந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் அதே காரணத்துக்காக வழக்கு தொடர்வது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. என்னை மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் ரஜினி கூறியுள்ளார்.