பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியின் சம்பந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் போத்ரா 65 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரஜினியையும் அவர் சேர்த்திருந்தார். தன்னிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு முகுந்த் சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 6ந் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி கோர்ட் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தன் மீது தொரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாது:
பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என் மீது சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என்னிடம் பணம் பறிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று இந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் அதே காரணத்துக்காக வழக்கு தொடர்வது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. என்னை மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் ரஜினி கூறியுள்ளார்.