பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 மும் நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அதிமுக.,வை திமுக.,வும், திமுக.,வை அதிமுக.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது என்றார்.