தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
''காவிரி விஷயத்தில் கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் ரஜினி பேசியிருப்பதால், அவர் நடித்துள்ள, 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்,'' என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த், தெரிவித்தார்.
ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற ஜூன் 7ந் தேதி வெளிவருகிறது. காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தார். மேலும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
'காலா' திரைப்படத்தை, கர்நாடகத்தில் திரையிடுவது தொடர்பாக, கன்னட திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காவிரி நதி நீர் விஷயம் தொடர்பாக, நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு எதிராக பேசியுள்ளார். இதனால், காலா திரைப்படத்தை வெளியிட்டால் மக்கள் மத்தியில் பிரச்னை எழும் என்று, கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இறுதியில், கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த், கூறுகையில், ''காவிரி விஷயம் தொடர்பாக, கர்நாடகாவுக்கு எதிராக, ரஜினி பேசியிருப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்டாலும், 'காலா' திரைப்படம் திரையிட மாட்டோம்,'' என்றார்.
கர்நாடகாவில் ரஜினிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பலரும் எதிர்பார்த்திருந்த 'காலா' திரைப்படம் திரையிடுவதற்கு, கன்னட திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.