ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
'கோலமாவு கோகிலா' படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், அனிருத்தை ஏகத்துக்கும் நடிகை நயன்தாரா புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதற்கு போட்டியாக இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை நயன்தாராவின் அருமை பெருமைகளை அள்ளிவிடத் துவங்கி இருக்கிறார்.
நயன்தாரா குறித்து, அவர் கூறியிருப்பதாவது: பர்சனலாக நயன்தாரா ரொம்பவும் நல்லவர். எல்லோர்கிட்டயும் ரொம்பவும் பிரியமா இருப்பாங்க. அவங்களுக்கு என்னோட மியூசிக் ரொம்பவே பிடிக்கும். என்னோட பாடல்களை கேட்டு, அவங்க நெகிழ்ந்து போய் பல முறை எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி இருக்காங்க. நான் உங்க பெரிய ரசிகர்னு மெசேஜ் அனுப்புவாங்க. சில சமயம் விருந்து வைக்கிற அளவுக்கு சமையல் செய்து சாப்பாடு அனுப்பி வைப்பாங்க. அந்த அன்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இவ்வாறு அனிருத் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.