தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆனந்த கிருஷ்ணன், இயக்கிய படம் மெட்ரோ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படம் பெண்களிடம் செயின் பறிக்கும் திருடர்கள் பற்றிய கதை. திருடர்கள் எப்படி திட்டம்போட்டு செயின் பறிக்கிறார்கள், செயின் திருடர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பது தத்ரூபமாக சொன்ன படம்.
படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. படத்தை பார்த்து எப்படி செயின் அறுக்கலாம் என்று இளைஞர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று தணிக்கை குழு அனுமதி மறுத்தது. பிறகு ரிவைசிங் கமிட்டி வரைக்கும் சென்று ஏ சான்றிதழுடன் படம் வெளியானது.
படத்தை சின்னத்திரை சேனல்கள் வாங்க ஆர்வம் காட்டியது. ஆனால் அதற்கு சேனல்களில் ஒளிபரப்புவதற்கென்று தனியாக சான்றிதழ் பெற வேண்டும். இதனால் 22 இடங்களை கட் செய்து வன்முறை காட்சிகள் சிலவற்றை கருப்பு வெள்ளைக்கு மாற்றி தணிக்கை குழுவிற்கு அனுப்பினார்கள். அப்படி இருந்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்து விட்டது. ஒளிபரப்பு மறுப்பை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு போக முடியாது என்பதால் நீதிமன்றத்தை நாடலாமா என்று தயாரிப்பு தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.