மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படம் பெரும் வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் தந்து கொண்டிருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே தன்னுடைய தந்தை என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஆரம்பித்தார் பாலகிருஷ்ணா.
அப்படத்தை தேஜா இயக்க பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமானது. ஆனால், படம் ஆரம்பித்த சில நாட்களுக்குள் இயக்குனர் தேஜாவுக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், தேஜா படத்திலிருந்து விலகினார். பின்னர் படத்தை பாலகிருஷ்ணாவே இயக்குவதாக தகவல் வெளியானது.
இருப்பினும் 'மகாநதி' படம் வெளிவந்த பின் பாலகிருஷ்ணா அவருடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. 'மகாநதி' படம் போன்று தரமான ஒரு படமாக என்டிஆர் படம் உருவாக வேண்டுமென்றால் அந்தப் படத்தை தான் இயக்குவதை விட சிறந்த ஒரு இயக்குனர் இயக்கினால் தான் சிறப்பாக இருக்கும் என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.
பாலகிருஷ்ணாவின் 100வது படமான 'கௌதமிபுத்ர சட்டகர்ணி' படத்தை இயக்கிய கிரிஷ்-ஐ அழைத்து 'என்டிஆர்' படத்தை இயக்கித் தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் கோரிக்கையைத் தட்ட முடியாத கிரிஷ் படத்தை இயக்க சம்மதித்திருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாலகிருஷ்ணா நேற்று வெளியிட்டார்.
“என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை இயக்கச் சொன்ன பாலகிருஷ்ணாவுக்கு நன்றி. இது ஒரு சாதாரண படமல்ல, தெலுங்கு மக்களின் பெருமையைப் பற்றிச் சொல்லும் படம். எனது மனப்பூர்வமான உழைப்பை இந்தப் படத்தில் கொடுப்பேன்,” என இயக்குனர் கிரிஷ் தெரிவித்துள்ளார்.